Onlinepj யின் விவாதம் !

சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

2 பிப்., 2010

புதுமடத்தில் மாபெரும் இஸ்லாமிய பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ்....

வரும் பிப்ரவரி மாதம் 13 ம் தேதி மாலை சரியாக 6 மணியளவில் (மஹரிப் தொழுகைக்குப் பிறகு ) புதுமடத்தில் மாபெரும் இஸ்லாமிய பொதுக்கூட்டம்.


சிறப்புரை:  
சகோ. அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் 
சகோதரி யாஸ்மீன் அவர்கள்

இடம்: பேருந்து நிலையம் (இடம் மாற்றப்பட்டுள்ளது)

அன்பார்ந்த சகோதரர்களே இப்பொதுக்கூட்டம் முக்கியமா பெண்களின் இஸ்லாமிய சிந்தனை பற்றிய பொதுக்கூட்டமாகும் ஆகையால் தாங்கள் வீட்டில் சகோதரிகளை பெருமளவு கலந்து கொண்டு துாய இஸ்லாத்தினை பற்றி அறிந்து கொள்ள சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : சகுபர் சாதிக் கிளை தலைவர்
+919994415322

29 ஜன., 2010

திருட்டு விசிடியும் கமலின் கோமாலி தனமும்


முழுவதும் படிக்க படத்தை கிளிக் செய்யவும்







27 ஜன., 2010

இருமேனி புதுமடம் கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (26 /01 /2010) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இருமேனி, புதுமடம் கிளை மற்றும் உச்சிப்புளி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாமில் நமது கொள்கை சகோதரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

மேலும் பலர் தயாராக இருந்தும் மருத்துவ மனையில் குறிப்பிட்ட அளவு முடிந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இராமாநதபுர மாவட்டத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் 24 மணி நேரமும் இரத்த தானம் செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அல்ஹம்துலில்லாஹ்!


22 ஜன., 2010

டிஎன்டிஜேவின் உடனடி நடவடிக்கை!


விஜய் டிவியில் கடந்த வாரம் (17-01-2010) நடக்க இருப்பதாக காண்பிக்கப்பட்ட நீயா? நானா?’ என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தில் முஸ்லிம் பெண்களே ஃபர்தாவை குறை கூறுவது போன்ற காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால் அதுபற்றிய ஞானம் உள்ளவர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும்.

படிப்பறிவோ, அனுபவ அறிவோ இல்லாத ஒருவரிடம் அறுவை சிகிச்சை செய்வது எப்படி எனக் கேட்டால் தனக்கு எது தெரியுமோ அதைத்தான் அவர் கூறுவார். அவரது சொல்லைக் கேட்டு அறுவை சிகிச்சை செய்திட முடியாது. அதுபோலத்தான் இதுவும்.

வியாபார ரீதியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் அதில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை விதைப்பதுதான் தொலைக்காட்சிகளின் நோக்கம். அதற்காக இஸ்லாமியர்களையும், மற்றவர்களையும் விவாதத்திற்கு அழைக்கிறோம் என்று கூறி எதிர்தரப்பினரை சரியாக தேர்ந்தெடுத்துவிட்டு முஸ்லிம்கள் தரப்பில் அதுபற்றிய ஞானம் இல்லாதவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

அவர்களோ தங்கள் முகம் தொலைக்காட்சியில் தெரிந்தாலேபோதும் எனும் எண்ணத்தில் தங்களுக்கு தோன்றியதையும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் விரும்புவதையும் கூறிவிடுகின்றனர். இதனால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்பை இவர்கள் உணருவதில்லை. உதாரணத்திற்காக இதை குறிப்பிடலாம். ஸஹர் நேர நிகழ்ச்சிகளை பல இயக்கங்கள் தங்கள் செலவில் நடத்தும் போது பிரச்சினைகள் வருவதில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன் வின் டிவி நிறுவனத்தாரால் ஸஹர் நேர நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் எதிர் தரப்பில் எஸ்.வி. சேகரும் முஸ்லிம்கள் தரப்பில் இஸ்லாத்தை அறியாத ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவரை தேர்ந்தெடுத்ததே நான்தான் என்று எஸ்.வி. சேகரே குறிப்பிட்டார். அந்த பெயர் தாங்கி முஸ்லிமின் தொப்பியை எடுத்து எஸ்.வி. சேகர் தன் தலையில் வைத்தபோது புளகாங்கிதமடைந்த அவர், இது நான் ஹஜ்ஜுக்கு சென்றபோது வைத்த தொப்பியாகும். இதை நீங்கள் போடுவது எனக்கு பெருமை யாக இருக்கிறது என்று அழாத குறையாக கண்களில் நீர்மல்க கூறி நெகிழ்ச்சியடைந்தார்.

வெடிகுண்டுகளை வைப்பது முஸ்லிம்கள்தான் என எஸ்.வி. சேகர் குறிப்பிட்டபோது அதை ஆமோதிப்பவர்போல் மௌனம் காத்தார். இன்னும் எத்தனையோ இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்லும்போதெல்லாம் டிவியில் பங்கேற்பதுதான் அவருக்கு பிரதானமானதாக இருந்ததே தவிர பதில் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியவில்லை என்பதை விட சொல்லத் தெரியவில்லை என்பதே சரியானது. ஆக அந்நிகழ்ச்சியில் எஸ்.வி. சேகர், ஆர்.எஸ்.எஸ் சிந்தனையை புகுத்தியதைதான் காண முடிந்தது. முஸ்லிம்கள் சார்பாக நியமிக்கபட்டவரின் முன்பாகவே இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலைதான் இந்த நிகழ்சிசிகளிலும் ஏற்படும். அவ்வாறே ஏற்பட்டதாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு இயக்கத்தின் ஆலிமாவும் தற்போது கூறியுள்ளார். இன்னும் பல முஸ்லிம் அமைப்புகளும் அதை நிறுத்த வேண்டுமென கூறியுள்ளன. ஆனால் டிஎன்டிஜே இந்த நிகழ்ச்சியை வேண்டுமென்றே நிறுத்திவிட்டதாக சிலர் அவதூறு கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டதன் நோக்கத்தை அவர்கள் அறிவார்களானால் டிஎன்டிஜே செய்தது சரியானதே என அவர்களுக்கு புரியவரும்.

எதையும் குறுகிய கண்ணோட்டத்துடன் நோக்கி அவதூறுகளை அள்ளி தெளிக் காமல் பரந்த நோக்குடன் காண வேண்டும். முஸ்லிம்கள் மீது எத்தகைய சேற்றை வாரி இறைத்தாலும் அவர்கள் பெட்டிப் பாம்பாகத்தான் இருப்பார்கள், எதுவும் செய்ய மாட்டார்கள் என்று அன்றைய மீடியாக்கள் எண்ணிக் கொண்டிருந்தன.

அத்தகைய நிலையை நம்முடைய போராட்டங்கள் மாற்றி அமைத்தன. சமுதாயத்திற்கு எதிரான பிரச்சினைகளில் அவர்கள் சீறி எழுவார்கள் என்பதை அறிந்ததும் அடக்கி வாசிக்கப்பட்டது. ஆனாலும் இடையிடையே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமலில்லை. அத்தகைய நிகழ்வுகளில் நாம் மென்மையை கடைபிடித்தால் அது பழைய பல்லவியாகவே மாறும்.

இஸ்லாத்திற்கோ சமுதாயத்திற்கோ ஒரு இழுக்கு ஏற்படும்போது காலிக் கூடாரமான சில அமைப்புகளைப்போல நாம் எதிரிகளுக்கு சாதகமாக ஒருபோதும் நடப்பதில்லை. வலிமையான போராட்டங்களை நடத்த விளையும்போதுதான் அதில் மாற்றம் ஏற்படுகிறது. தவறிழைத்தவர்கள் தவறுக்கு வருந்துகின்றனர்; மறுப்பு வெளியிடுகின்றனர். எனவே ஆற, அமர யோசித்து செய்வோம் என்பது ஆதாயம் தேட நினைப்பவர்களின் அளவுகோல். நம்மை பொறுத்தவரை வலிமையான போராட்டங்களை நாம் அறிவிக்கும்போது அல்லாஹ் அதை வெற்றியடைய செய்வான் என்பது நம்முடைய அளவுகோல்.

இஸ்லாத்தையும், பர்தாவின் அவசியத்தையும் அறியாத பெயர்தாங்கி முஸ்லிம் பெண்களை வைத்து நடத்தும் இந்த நிகழ்ச்சியினால் இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என எண்ணி அந்நிகழ்ச்சியை தடை செய்ய போர்க்கொடி தூக்கியது டிஎன்டிஜே.
“பர்தா அணிவதே எனக்கு கேவல மாக உள்ளது. என்னுடைய பெற்றோர்கள்தான் என்னை நிர்ப்பந்தப்படுத்தி பர்தா அணிய வைக்கிறார்கள்…” என்று ஒரு முஸ்ம் பெயர்தாங்கி மாணவி சொல்லக்கூடிய காட்சியை டிரைலராக ஒளிபரப்பியது விஜய் டி.வி. டிரைலர் ஒளிபரப்பிய 10-01-2010 அன்று இரவு டிஎன்டிஜே மாநில செயலாளர் தவ்பீக் அவர்கள் விஜய் டி.வி. அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால் மிகப் பெரிய பிரச்சினைகளை விஜய் டி.வி. நிர்வாகம் சந்திக்க நேரிடும். நிகழ்ச்சியை நாங்கள் ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்ற உத்தரவாதத்தை விஜய் டி.வி. நிர்வாகம் தர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து மறுநாள் கடந்த 11-01-2010 அன்று நுங்கம்பாக்கத்திலுள்ள விஜய் டி.வி. அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற டிஎன்டிஜே மாநில நிர்வாகிகள் ஒன்றும் அறியாத அப்பாவிகளை வைத்து விவாதம் என்ற பெயரில் நாடகம் ஆடுவதை விட்டு விட்டு உங்களுக்கு பர்தா பற்றி ஆட்சேபனை இருந்தால் எங்களது மார்க்க அறிஞர்களுடன் விஜய் தொலைக்காட்சி நேரடி விவாதத்திற்கு தயாரா? என்ற அறைகூவலோடு, முஸ்ம்களின் மனதைப் புண்படுத்தும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் ஒளிபரப்பக் கூடாது என்ற செய்தியோடு கடிதத்தையும் வழங்கியது.
மேலும் சென்னை மாநகர ஆணையரிடத்தில் மத துவேசத்தை தூண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்படி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்ற உறுதி மொழியை வியாழக்கிழமைக்குள் (14-01-2010) விஜய் டி.வி. நிர்வாகம் வழங்கவில்லையானால், வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்கு விஜய் டி.வி. அலுவலகம் முஸ்ம்களால் முற்றுகையிடப்படும் என்ற செய்தியையும் தெரிவித்துள்ளோம் என்பதையும் சென்னை கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.

வியாழக்கிழமைக்குள் நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்ற உறுதிமொழியை வழங்காவிட்டால் வெள்ளிக்கிழமை விஜய் டி.வி. அலுவலகம் முற்றுகை என்ற செய்தி பரவ, பிரச்சினையின் விபரீதத்தை உணர்ந்த விஜய் டி.வி. நிர்வாகம் 12-01-2010 அன்று மதியம் 2 மணியளவில் மாநில நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்று உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

போராட்டம் அறிவித்ததும் அதை ஆதரித்தவர்களில் ஒரு சிலர் அது தடை செய்யப்பட்டவுடன் வேறு சிலரால் உருவாக்கப்பட்ட ஃபித்னாவால் குமுற ஆரம்பித்து விட்டனர். நீயா? நானா?’ நிகழ்ச்சியில் கடைசி மூன்று நிமிடம் காலிக்கூடாரத்தின் தலைவர் பேசுகிறார் என்று நமக்கு தெரிந்ததால்தான் நாம் தடுத்தோமாம். அந்த நிகழ்ச்சியின் விளம்பத்தை பார்த்துதான் போராட்டத்தை அறிவித்தோமே ஒழிய யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியாது; அதன் அவசியமும் நமக்கில்லை. இஸ்லாத்தை தவறாக விமர்சிப்பவர்களுடன் யார் இருந்தாலும் அதை நாம் எதிர்க்கவே செய்வோம். வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்:

இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த நீயா? நானா?’ நிகழ்ச்சியில் பர்தா தேவைதான் என்று பேசிய சகோதரர் அமீருத்தீன் அவர்கள் நம்மை தொடர்பு கொண்டார். அவர் கூறியதாவது…

“பர்தாவின் அவசியத்தை பற்றி பேசக் கூடிய தரப்பில் என்னை அழைத்தார்கள். அங்கு சென்று கலந்து கொண்டபோது, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி பேசியபோது, குர்ஆன் ஹதீஸ்களைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் சட்டம் போட்டார். மேலும், பர்தா தேவையில்லை என்று சொல்லும் முஸ்ம் பெயர் தாங்கிகளுக்குத்தான் அதிக நேரம் வழங்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க முயன்ற நமது தரப்புக்கு மைக்கே வழங்கப்படவில்லை. மேலும் பர்தா தேவையில்லை’ என்று கூறிய தரப்பில் தனது உடன் பரிணாமங்கள் வெளியில் தெரியக் கூடிய அளவுக்கு இறுக்கமான ஆடையணிந்து ஒரு முஸ்ம் பெயர் தாங்கி பெண் நிகழ்ச்சி நடத்துனர் கோபி நாத்தை, கோபி… கோபி… என்று செல்லமாக அழைத்தார்.

அது அவரது தோழியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவரைப் போன்று முஸ்ம் பெண்கள் உடையணியலாமே என்று கோபிநாத் கூறி அந்த பெண்மணிக்குத்தான் நிகழ்ச்சியில் இறுதியில் பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நானே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். டிஎன்டிஜே முற்றுகைப் போராட்டம் அறிவித்ததும் முதல் சந்தோஷப்பட்டவன் நான்தான். தக்க தருணத்தில் டிஎன்டிஜே போராட்டத்தை அறிவித்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளது பாராட்டதக்கது…” என்று தனது மனக்கு முறலை நம்மிடம் கொட்டித் தீர்த்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபரே இந்த அளவுக்கு நொந்துபோய் அதை எதிர்க்கின்றார் என்றால், நிகழ்ச்சியின் விபரீதத்தை சொல்த்தான் தெரிய வேண்டுமா?

கடந்த வருடம் அக்டோபர் மாதம் விஜய் டி.வி.யில் பெண்கள் தாலி அணிவது அவசியமா?’ என ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது இந்துக்களின் மனதை வேதனைப்படுத்தியது. அந்நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத், தான் எந்த முடிவை சொல்ல விரும்புகிறாரோ அந்த தலைப்பில் திறமையானவர்களை வைப்பது வழக்கம். பொதுவாகவே இந்நிகழ்ச்சிகளில் எவ்வாறு பேச வேண்டும் என்று முன்கூட்டியே ஒத்திகை பார்த்துதான் நடத்தப்படும். அவ்வாறு இந்த நிகழ்ச்சியில் தாலி தேவையில்லை எனும் அணியில் சிலரை சாமார்த்தியமாக பேச கோபிநாத் ஏற்பாடு செய்திருந்தார். விவாதம் சூடுபிடித்ததும் சில பெண்கள் தாலி தேவையில்லை. அது நாய் லைசென்ஸ் போன்றது என்றெல்லாம் சொல்ல அங்கே தனது வக்கிர புத்தியை கையாண்டார் கோபிநாத். அதாவது தாலி தேவையில்லை என்று சொன்ன ஒரு பெண்மணியிடம் அப்படியானால் நீங்கள் தாலியை கழற்றுவீர்களா? என கேட்க ஆம் கழற்றுவேன் என்று சொல்ல இங்கேயே கழற்றுவீர்களா? என மீண்டும் கேட்க, இதோ கழற்றுகிறேன் என்று கூறி அந்த பெண் தாலியை கழற்றி அவர் கையில் கொடுத்தார். கோபிநாத் எதிர்பார்த்தது அங்கே நிறைவேறியது. தாலியை கழற்றி கொடுத்த பெண்மணிக்கு பகுத்தறிவாளர், தைரியசாலி என புகழாரம் சூட்டி பரிசும் வழங்கப்பட்டது.

இதை பார்த்த இந்துக்கள் வெகுண்டெழுந்தனர். நாங்கள் புனிதமாக கருதுவதை பொதுமேடையில் விவாதிக்கும் நீங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை விவாதிக்கும் தைரியம் உண்டா? என விஜய் டிவிக்கு சவால் விட்டு சில தலைப்புகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி பர்தா அணிவதேன்?’, முஸ்லிம் பெண்கள் பள்ளிக்குள் அனுமதிக்கபடாததேன்?’, ரமலான் மாத நோன்பினால் பலனுண்டா?’, கிறஸ்தவர்கள் திருமணத்திற்கு பின் மோதிரத்தை கழற்றுவார்களா?’ என்பன போன்று பல தலைப்புகளை குறிப்பிட்டுள்ளனர்.
அவற்றில் ஒன்றான பர்தா விஷயத்தை கையிலெடுத்து நிகழ்ச்சி தயாரிக்க விஜய் டிவி திட்டமிட்டது. தாலி அவசியம் என பலர் பேசியதை எடிட் செய்து, தான் விரும்பியதை ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில் பர்தா விவாதம் எப்படி முடிவுறும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இஸ்லாத்தையும், பர்தாவின் அவசியத்தையும் உணராத பெயர்தாங்கி முஸ்லிம்களை கொண்டு பொது இடத்திலே தாலியை கழற்றி வைத்ததுபோல் விஜய் டிவியின் கோபிநாத், பர்தாவையும் கழற்றி வீச செய்ய திட்டமிட்டிருந்திருக் கலாம். ஆனால் அதற்கு முன் தவ்ஹீத் ஜமாஅத் அந்த அவல நிலையை தடுத்து விட்டது. ‘இது குறித்து சுதந்திரமான விவாதம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தால் பர்தா குறித்த எத்தகைய கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான விளக்கம் தர நாங்கள் தயார் என்பதை அறிவுறுத்துகிறோம். இதற்கு ஏற்பாடு செய்வதே விவேகமானதாகும்’ என்று விஜய் டிவிக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் எழுதிய தபாலில் குறிப்பிட்டுயிருந்தது.

ஏற்கெனவே நடத்த திட்டமிடப்பட்டிருந்த அந்த விவாத நிகழ்ச்சி குறிப்பிட்ட தினத்தன்று (17-01-2010) ஒளிபரப்பப்படவில்லை. முஸ்ம்களின் உணர்வுகளை மதித்து ஒளிபரப்பை நிறுத்திய விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் பின்வருமாறும் அதற்கு அறிவுறுத்துகிறோம். மத விவகாரங்களை விவாதப் பொருளாக எடுப்பதை இனிமேலாவது விஜய் தொலைக்காட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிவுரை. எல்லா புகழும் இறைவனுக்கே!

20 ஜன., 2010

Quran Encyclopedia New Version 3.1.2






திருக்குர்ஆன் வசனங்களை தேடி எடுக்க அரபி தெரிந்திருக்க தேவையில்லை மிக எளிதாக

உங்களுக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகள் மூலம் வசனங்களை தேடி எடுக்கும் வசதி!


தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!


வசனங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த அதற்குரிய விரிவான விளக்கங்கள்!


2 காரிகள் ஓதிய கிராத்!


எட்டாம் பதிப்பிற்கு பின்னர் வந்த திருத்தங்களுடன் பி.ஜே அவர்களின் லேட்டஸ்ட்
குர்ஆன் தர்ஜுமாவை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது!


  • தமிழ்-அரபி-ஆங்கிலம்!
  • இன்னும் பல்வேறு சிறப்பசம்ங்கள்!










குர்ஆன் என்ஸைக்லோபிடியா மென்பொருள் பற்றி மேலும் விபரம் அறிய:


Visit us www.mwinsys.com



Cell: +91 9840075701

18 டிச., 2009

முஸ்லிம்கள் பார்வையில் தெலுங்கானா




 பற்றி எரியும் ஆந்திரா!

விதைத்ததை அறுவடை செய்யும் காங்கிரஸ்!!






  • ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க
  • வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டங்கள் அறுபது ஆண்டுகளாக நடந்து வருகின்றன.

ஆளும் வர்க்கம் இதற்குச் செவி சாய்க்க மறுத்து வந்தது. இன்றோ அலட்சியப்படுத்த முடியாத அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்ததால் வேறு வழியின்றி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தற்காலிகமாகச் சமாதானப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் அரசின் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று சொல்ல முடியாது. மக்கள் கொந்தளிக்கும் போது அதை நீர்த்துப் போகச் செய்வதற்காக இது போல் வாக்குறுதி கொடுத்து பின்னர் கிடப்பில் போடுவது தான் காலம் காலமாக காங்கிரஸ் கடைப்பிடித்து வரும் தந்திரம். பாபர் மசூதி அதே இடத்தில் கட்டித் தரப்படும் என்பது போல் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன.

அதற்கான உள்ளடி வேலைகளையும் காங்கிரஸ் செய்ய ஆரம்பித்துள்ளது.

மாநிலத்தைப் பிரிப்பதற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இப்போது காங்கிரஸ் கூறுகிறது. சட்டசபையில் தீர்மானம் போட்டுத் தான் பிரிக்க முடியும் என்றால் அது சாத்தியமே இல்லை. ஏனெனில் தெலுங்கனா பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற பகுதி சட்டமன்ற உறுப்பினர்களை விட குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். தெலுங்கானா பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் ஆதரவாக வாக்களிப்பார்கள். மற்றவர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்பதால் தீர்மானம் நிச்சயம் தோற்று விடும்.

சட்டசபையில் தீர்மானம் போட்டுத் தான் பிரிக்கப்படும் என்றால் தெலுங்கானா பிரிக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தது எப்படி?

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி பிரிப்பது என்றால் அளவில் சிறிதாக உள்ள புறக்கணிக்கப்படும் பகுதி ஒருக்காலும் பிரிந்து செல்ல முடியாது. பெரும்பாலானவர்கள் பிரிந்து செல்ல ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.

எனவே ஒரு பக்கம் தெலுங்கானா அமைக்கப்படும் என்று கூறிவிட்டு மறு பக்கம் தெலுங்கானா அமையாமல் இருப்பதற்குரிய வேலையைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது காங்கிரஸ் அரசு.

பிரிக்கப்படுமா? பிரிக்கப்படாதா? என்பதை விட பிரிக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பது தான் நாம் ஆராய வேண்டிய விஷயம்.

ஆந்திர மாநிலத்தின் வரலாற்றைத் தெரிந்து கொண்டால் தான் இக்கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா என்பதை அறிய முடியும்.

வெள்ளையர்கள் ஆட்சியின் போதும், நாடு விடுதலை அடைந்த போதும் ஆந்திரா என்ற மாநிலம் இருக்கவில்லை. தெலுங்கானா எனப்படும் தக்கானம் தான் இருந்தது. இது ஹைதராபாத் நிஜாம் மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்தது.

நாடு விடுதலை அடைந்த பின்னர் தனி நாடாக இருந்த தெலுங்கானாவை இந்திய அரசு பலப்பிரயோகம் செய்து இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது. இந்தியாவின் ஒரு மாநிலமாக தெலுங்கானா ஆக்கப்பட்டது.

தெலுங்கானாவைத் தவிர ஆந்திராவில் உள்ள மற்ற பகுதிகள் அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்தன. தெலுங்கு பேசும் இப்பகுதியினர் சென்னை மாகாணத்தில் இருந்து தங்கள் பகுதியைப் பிரித்து தெலுங்கு மாநிலம் அமைக்கப் போராடி வந்தனர். ராமுலு ரெட்டி என்பவர் இதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவுடன் தெலுங்குப் பகுதிகளில் வன்முறை வெடித்து மத்திய அரசு பணிந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சென்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கு பகுதிகள் ஆந்திரா எனும் மாநிலமாக ஆக்கப்பட்டது.

சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த பகுதிகள் ஆந்திரா என்றும், நிஜாம் மன்னரின் ஆளுகையில் இருந்த தெலுங்கானா இன்னொரு மாநிலமாகவும் இருந்தால் குடிமூழ்கப் போவதில்லை. ஆனாலும் இரண்டையும் இணைத்து ஒரு மாநிலமாக்க வேண்டும் என்று நேருவும், பட்டேலும் விடாப்பிடியாக இருந்தனர்.

இணைக்க வேண்டும் என்று எந்தப் போராட்டமும் நடக்காமல் இருந்தும் பெரும்பானமை மக்கள் அதை விரும்பாமல் இருந்தும் மக்கள் விருப்பத்துக்கு மாற்றமாக இரண்டையும் இணைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.

இதற்காக அமைக்கப்பட்ட சீரமைப்புக்குழு இணைப்பதில் கேடுகள்வ் தான் அதிகம் என்று அறிக்கை தந்த பின்பும் தெலுங்கானாவை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று மக்கள் விருப்பத்துக்கு எதிராக இணைத்தனர். இதற்குக் காரணம் என்ன?

தெலுங்கானா பகுதியில் ஆதிலாபாத், நிஜாம் பாத், கரீம் நகர், ஹைதராபாத், மஹ்பூப் நகர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மை மாவட்டங்களாக இருந்தன. (மாவட்டங்களின் பெயர்களே இதைச் செல்லும் வகையில் உள்ளன). மேடக், வாரங்கல், கம்மம், ரங்காரெட்டி, நலகொண்டா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கவில்லை.

தெலுங்கானா தனி மாநிலமாக இருந்து முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் தொடர்ந்து ஒரு முஸ்லிம் தான் முதலமைச்சராக வர முடியும் என்ற நிலைமை வல்லபாய் பட்டேலுக்கும், நேருவுக்கும் உறுத்தலாக இருந்தது.

சென்னையில் இருந்து பிரிக்கப்பட்ட ஆந்திராவுடன் தெலுங்கானாவைச் சேர்த்து விட்டால் முஸ்லிம்கள் சிறுபான்மையாகி விடுவார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே ஆந்திராவுடன் தெலுங்கானா இணைக்கப்பட்டது.

நேருவும் பட்டேலும் அத்துடன் திருப்தி அடையவில்லை.

சென்னையில் இருந்து பிரிந்த பகுதிகளில் உள்ள ஆதிக்க சாதியினரை தெலுங்கானா பகுதியில் குடியமர்த்தும் குள்ள நரித்தனத்தையும் செய்து முடித்தனர்.

அதாவது தெலுங்கானா பகுதியில் கூட முஸ்லிம்களின் பெரும்பான்மையை ஒழிக்க வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம்.

மக்கள் விரும்பாத போதும், இணைக்கக் கூடாது என்று நிபுணர்கள் அறிக்கை அளித்த பின்பும் இணைப்பதற்கு நேரு சொன்ன காரணம் ஒரு மொழி பேசும் மக்கள் இரண்டு மாநிலங்களாக இருக்கக் கூடாது என்பது தான். ஆனால் இந்தி மொழிக்கு மட்டும் பல மாநிலங்கள் இருந்தது எப்படி என்று சிந்திக்கும் போது நேரு சொன்ன காரணம் பொய்யானது என்பது தெரிய வரும்.

பாகிஸ்தான் பிரிவினையின் போது இங்குள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின் காரணமாகவும், ராணுவ பலம் மூலம் தெலுங்கானா இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதாலும், தெலுங்கானா முஸ்லிம்கள் இதை எதிர்த்துப் போராடும் மனநிலையில் இல்லை. அதற்கான மனவலிமையும் அவர்களுக்கு அப்போது இல்லை.

அன்று விதைத்ததைத் தான் காங்கிரஸ் இப்போது அறுவடை செய்கிறது.

ஆந்திராவை விட தெலுங்கானா நீர் வளமும், கனிம வளமும் நிறைந்ததாக இருந்தும் ஆந்திராவின் உயர்சாதி ஆதிக்கவாதிகளால் எல்லா வளமும் ஆந்திராவுக்கு என்று ஆனது. தெலுங்கானாவில் உற்பத்தியாகும் நதிகளில் 90 சதவீதம் தண்ணீர் ஆந்திராவுக்கும், பத்து சதவீதம் தெலுங்கானாவுக்கும் என்று அநீதி இழைக்கப்பட்டது.

இதன் காரணமாகவே இங்கே நக்ஸலைட்டுகள் உருவானார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் ஆதிக்க சாதியினர் ஒடுக்குகிறார்கள் என்பதால் சட்டத்தை நக்ஸலைட்டுகள் கையில் எடுக்கும் அளவுக்கு தெலுங்கானா புறக்கணிக்கப்பட்டது. இதை வெகுஜன மக்களின் கருத்தாக சந்திரசேகர ராவ் மாற்றினார்.

ஹைதராபாத் நிஜாம் பெயரில் அமைந்த உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களும் இப்போராட்டத்தில் குதித்ததால் நிலைமை தீவிரமடைந்தது; மத்திய அரசைப் பணிய வைத்துள்ளது.

இப்போது தெலுங்கானா பிரிக்கப்படுவதால் முஸ்லிம்கள் பெரும்பான்மை மாநிலமாக அது அமையாது. ஏனெனில் குடியேற்றத்தின் மூலம் முஸ்லிம் பெரும்பான்மை என்பது குறைக்கப்பட்டு விட்டது. ஆனால் கனிசமான இடங்களை முஸ்லிம்கள் பெறக் கூடிய நிலைமை தெலுங்கானாவில் இருக்கும்.

அநியாயமாக, கெட்ட எண்ணத்துடன் ஆந்திராவில் சேர்க்கப்பட்ட தெலுங்கானா தனி மாநிலமாக ஆவது தான் செய்த அநியாயத்திற்கான ஒரே பரிகாரமாகும் என்பதில் ஐயமில்லை.

மேலும் பொதுவாக பார்க்கும் போது பெரிய மாநிலங்கள் பிரிக்கப்படுவது சிறந்த நிர்வாகத்தைத் தர உதவும்.

30 கோடி மக்களைக் கொண்டதாக இந்தியா இருக்கும் போது 25 மாநிலங்கள் இருந்தன என்றால் இன்று நூற்றிப் பத்து கோடியை மக்கள் தொகை தாண்டிய பிறகு 100 மாநிலங்களாவது அமைவது தான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குறைந்தது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டால் ஒரு முதல்வரால் சிறப்பாகக் கண்காணிக்க முடியும். அமைச்சர்களை மக்கள் எளிதாகச் சந்திக்க முடியும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமமாக முன்னேற முடியும். தமிழகத்தில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப் படுவதை யாரும் மறுக்க முடியாது.

மக்கள் போராட்டம் நடத்தாவிட்டாலும் அறிவும், தூர நோக்கும் மக்கள் நலனில் அக்கறையும் உள்ள அரசாங்கம் தானாக முன் வந்து மாநிலங்களைப் பிரிக்க வேண்டும். ஒரு மாநிலம் என்பது ஒரு கோடி முதல் இரண்டு கோடி மக்களைக் கொண்டதாக இருக்கும் வகையில் பிரிப்பது நாட்டுக்கு நல்லது. இதனால் மொழி வெறி கூட மறைந்து போய் விடும்.

நன்றி : ஆன்லைன் பீஜே

யார் சுன்னத்துவல் ஜமாஅத்?

 
வாங்கி விட்டீர்களா
இந்த மாத ஓரிறை கொள்கை விளக்க மாத இதழ் மறந்து விடாதீர்கள்
படித்து விட்டீர்களா
ஓரிறை கொள்கை விளக்க பெண்கள் மாத இதழ் மறந்து விடாதீர்கள்
படித்து விட்டீர்களா
இந்த வார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் மறந்து விடாதீர்கள்
பாருங்கள்
பார்க்க தூண்டுங்கள் காணத்தவராதீர்கள்
Copyright © 2009 Pudumadam TNTJ Site Designed and Developed by A.Md Ziya Contact Us